என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரியில் கடல் சீற்றம் - 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
- பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- விசைப்படகுகள் குளச்சல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.
கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் நேற்று முதலே கடல் சீற்றமாக காணப்பட்டது. இன்று 2-வது நாளாக கடல் சீற்றமாக இருந்தது. குளச்சல் பகுதியில் மீன்பிடி தடைகாலம் முடிந்து நேற்று பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பாதி தூரம் சென்றதும் கடல் சீற்றத்தின் காரணமாக கரை திரும்பினார்கள். இதையடுத்து விசைப்படகுகள் குளச்சல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, நீரோடி, இறையுமன்துறை, பூத்துறை, ராஜாக்கமங்கலம் துறை, கோவளம், கன்னியாகுமரி பகுதிகளிலும் கடல் சீற்ற மாக இருந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகள், கட்டுமரங்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. குளச்சல், சின்னமுட்டம் துறைமுகங்கள் வெறிச் சோடி காணப்பட் டது.
சின்ன முட்டம் துறைமுகப் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் விசைப்படகு நடுக்கடலில் பழுதானதால் 18 மீனவர்கள் நடுக்கடலில் தவித்தனர். இதையடுத்து சக மீனவர்கள் நடுக்கடலில் தவித்த 18 மீனவர்களையும், பழுதான விசைப்படகையும் மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர். குளச்சல் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக கடற்கரையை ஒட்டி உள்ள வீடுகள் வரை கடல அலைகள் வந்து செல்கிறது.
அழிக்கால், பிள்ளை தோப்பு பகுதிகளிலும் கடல் சீற்றமாக உள்ளது. ராட்சத அலைகள் 15 அடி முதல் 20 அடி வரை உயரத்திற்கு எழும்பிய வண்ணம் உள்ளது. இதனால் கடற்கரை ஓரத்தில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்