search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்; கடைகளுக்குள் புகுந்த தண்ணீர்
    X

    குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்; கடைகளுக்குள் புகுந்த தண்ணீர்

    • சுற்றுலா பயணிகள் ஓட்டம்-பரபரப்பு
    • கடந்த 5 நாட்களாக கடல் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கடற்கரை, வட்டக்கோட்ைட, சொத்த விளை கடற்கரை, குளச்சல் கடற்கரை, லெமூர் கடற்கரை போன்றவற்றிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    விடுமுறை நாட்களில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். அதன்படி இன்று அனைத்து கடற்கரைகளிலும் ஏராளமானோர் குடும்பத்து டன் வந்திருந்தனர்.

    வழக்கமாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் குமரி மாவட்டத் தில் கடல் சீற்றமாக இருக்கும். கடந்த 5 நாட்களாக கடல் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    அடிக்கடி கடல் நீர் உள் வாங்குவதும், கடல் நீர்மட்டம் தாழ்வு அடைவ தும் நிகழ்ந்து வருகிறது. இன்று பகலும் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பின.

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை யில் இன்று ஏராளமானோர் சுற்றுலா வந்திருந்தனர். அப்போது கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் கடற் கரைக்கு வந்தது. ராட்சத அலைகள் வேகமாக காணப் பட்டதால் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனை கண்ட சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.

    கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகா னந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப்பட வில்லை.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கி யது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. எனவே இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இத னால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    Next Story
    ×