search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அருகே ராணுவ வீரர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்
    X

    கன்னியாகுமரி அருகே ராணுவ வீரர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்

    • பீரோவை உடைத்ததால் பரபரப்பு
    • கன்னியாகுமரி போலீசில் புகார்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால் விளையைச் சேர்ந்தவர் ராஜன் (வயது40).இவர் பஞ்சாபில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே இவரது தாயார் சாரதா சிறிய டீ கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை 6 மணிக்கு கடைக்கு வந்து பார்த்த போது அதன் அருகில் உள்ள தனது மகன் ராஜனின் வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்த போது யாரோ மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்தது தெரிய வந்தது. நகைகள் எதுவும் இல்லாததால் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இதனால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×