search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே வேன் மோதி முதியவர் சாவு
    X

    திருவட்டார் அருகே வேன் மோதி முதியவர் சாவு

    • டாக்டர்கள் அங்கு பரிசோதித்து விட்டு நாகர்பிள்ளை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருவட்டார் :

    திருவட்டார் அருகே சரல்விளை ஏற்றக்கோடு பகுதியை சேர்ந்தவர் நாகர்பிள்ளை வயது (72).

    இவர் ஆற்றூர் சந்திப்பில் இருந்து திருவட்டார் நோக்கி நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மினி டெம்போ மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த நாகர்பிள்ளையை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு ஆற்றூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்கு பிறகு அவர், மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.டாக்டர்கள் அங்கு பரிசோதித்து விட்டு நாகர்பிள்ளை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகள் அனுராதா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து கலியலூர் காட்டாத்துறை பகுதியை சேர்ந்த மினி டெம்போ டிரைவர் ஆல்பின்(50) மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×