search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்த அனிதாவின் தந்தை-சகோதரர் ராகுல்காந்தியுடன் சந்திப்பு - எதையும் திணிக்க மாட்டோம் என ராகுல்காந்தி உறுதி அளித்ததாக பேட்டி
    X

    நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்த அனிதாவின் தந்தை-சகோதரர் ராகுல்காந்தியுடன் சந்திப்பு - எதையும் திணிக்க மாட்டோம் என ராகுல்காந்தி உறுதி அளித்ததாக பேட்டி

    • தேர்வில் உயிரிழந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதாவின் தந்தை சண்முகம், சகோதரர் மணிரத்தினம் ஆகியோர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்கள்.
    • எந்த மாநிலத்திலும் எதையும் திணிக்க மாட்டோம் என்பது காங்கிரசின் பாலிசி அல்ல என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.

    நாகர்கோவில் :

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்ட போது நீட் தேர்வில் உயிரிழந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதாவின் தந்தை சண்முகம், சகோதரர் மணிரத்தினம் ஆகியோர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்கள்.

    அப்போது அவரது சகோதரர் மணிரத்தினம் ராகுல்காந்தியிடம் தமிழ கத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இவரது கோரிக்கைகளை ராகுல் காந்தி கேட்டறிந்தார். பின்னர் சகோதரர் மணிரத்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    ராகுல்காந்தி பாரத ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்குவதை அறிந்து அவரை சந்திப்பதற்காக நான் வந்திருந்தேன். கடந்த தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதை அவரிடம் நினைவூட்டி னோம். மீண்டும் அதை வலியுறுத்த அவரை சந்தித்தோம். ஜோதிமணி எம்.பி. அதற்கான ஏற்பாடு களை செய்து தந்தார்.

    நீட் தேர்வுக்கு தற்போது அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இதற்கு முதல் குரல் தமிழகத்தில் இருந்து தான் தொடங்கியது.அந்த நீட் தேர்வால் எனது தங்கை அனிதா மரணம் அடைந்தார்.வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெறப் போகிறது.அந்த நேரத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.நான் சொன்னதையும் அவர் காது கொடுத்து கேட்டார்.

    இந்த யாத்திரையின் போது நான் அவரை சந்தித்து நீட் தேர்வுக்கான விலக்கு கோரிக்கையை வலியுறுத்தியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது. ஜவஹர்லால் நேரு குடும்பத்தினர் இந்திய சுதந்திரத்திற்காக போராடினார்கள். ஆனால் ராகுல் காந்தி தற்போதைய ஆர்.எஸ்.எஸ். பாரதிய ஜனதா கட்சிகளிடமிருந்து இந்தியாவை மீட்க போராடு கிறார். இந்துத்துவ அமைப்பு களிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தி இந்த யாத்திரையை தொடங்கியுள்ளார். அதில் ராகுல் காந்தியுடன் நாங்களும் நடப்பதை எண்ணும்போது பெருமையாக இருக்கிறது.

    இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக நாம் உழைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.அதை அவரிடமும் தெரிவித்தேன்.கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி ஜெயிப்பதற்காக என்னால் முடிந்த வேலைகளை செய்வேன்.இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிற அனைவரும் காங்கிரஸ் கட்சிக்காக பாடுபட வேண்டும் என்பதை நான் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

    பாதயாத்திரையின் போது ஒரு கிலோ மீட்டர் தூரம் அவருடன் நடந்து சென்று இந்த கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.மாநில அரசின் கோரிக்கைகளை ஏற்காத அரசாக மத்திய அரசு இருக்கிறது . மாநில அரசின் கோரிக்கைகளை கேட்கும் அரசாக மத்திய அரசு இருக்க வேண்டும். அதற்கு ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்று கூறினேன்.

    அதற்கு ராகுல் காந்தி தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்று கேட்டார். எதிர்காலத்தில் நிகழக்கூடியதை முன்கூட் டியே தெரிந்து செயல்ப டக்கூடிய மாநிலமாக தமிழகம் இருந்து கொண்டி ருக்கிறது. இதனால் தான் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதையும் அவரிடம் தெரிவித்தேன்.

    எந்த மாநிலத்திலும் எதையும் திணிக்க மாட்டோம் என்பது காங்கிரசின் பாலிசி அல்ல என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.

    இவ்வாறு கூறினார்.

    Next Story
    ×