search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    நாகர்கோவிலில் மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவர் பெல்லார்மின் தொடங்கி வைத்தார்.
    • விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி வழங்க வேண்டும்

    நாகர்கோவில் :

    மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் மாநில அளவில் இன்று நடைபெற்றது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விக்னேஸ்வரி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவர் பெல்லார்மின் தொடங்கி வைத்தார்.

    மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி மற்றும் நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணியாற்றுவோர் தன்னார்வலர்கள் என்பதை ஊழியர்கள் என பெயர் மாற்றி அங்கீகரிக்கப்பட வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    Next Story
    ×