search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில்   லாரி டிரைவர் பலி
    X

    கோப்பு படம் 

    ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் லாரி டிரைவர் பலி

    • ராஜாக்கமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு
    • ட்ரான்ஸ்பார்மர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம்

    கன்னியாகுமரி:

    தென் தாமரை குளம் அருகே பொத்தையடியை சேர்ந்தவர் முருகன் (வயது 47), லாரி டிரைவர். இவர் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் நேற்று பேயோட்டிலிருந்து ராஜாக்கமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது கட்டுப்பாடு இழந்த முருகன் ராஜாக்க மங்கலம் அருகே எம்.ஜி.ஆர். நகர் வரும்போது அருகில் இருந்த ட்ரான்ஸ்பார்மர் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் பிரேம்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளார். பலியான முருகனுக்கு அகிலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    Next Story
    ×