search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் மீண்டும் களை கட்டிய கடற்கரை
    X

    கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் மீண்டும் களை கட்டிய கடற்கரை

    • 25 நாட்களுக்கு பிறகு வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி தொடங்கியது
    • காலையிலும் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி இயக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படு கிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக ரித்து உள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநிலசுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப் பட்டது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்ப தற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில்சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.

    காலை8மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி யது. சுமார் 3 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.

    மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிக ரித்ததால் கடற்கரை யில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாது காப்பு குழுமபோலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 25 நாட்களுக்கு பிறகு வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு போக்குவரத்து நேற்று நடந்தது. நேற்று ஒரே நாளில் 50 உள்ள பயணிகள் மட்டுமே படையில் வட்டக் கோட்டைக்கு உல்லாச படகு சவாரி செய்தனர். இன்று காலையிலும் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி இயக்கப்பட்டது.

    Next Story
    ×