என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது
- குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
- குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டார்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தொ டர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை போலீ சார் கண்காணித்து அவர் களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள்.
மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 47 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் இசக்கி முத்து (வயது 23). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிபோதை தகரா றில் அவரது நண்பரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு கலெக்டருக்கு பரிந்து ரை செய்தார். கலெக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயி லில் அடைக்கப்பட் டுள்ள இசக்கிமுத்துவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதை யடுத்து நாகர்கோவில் ஜெயில் அடைக்கப்பட்டி ருந்த இசக்கிமுத்து பாளை யங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் வினேஷ் (20). இவர் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது ஏற்கனவே பூதப்பாண்டி போலீசில் வழக்கு உள்ளது. வினேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. அவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டார்.
இதையடுத்து நாகர்கோ வில் ஜெயிலில் அடைக்கப் பட்டு இருந்த வினேசை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்