search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பளுகல் அருகே வீடு புகுந்து நகை கொள்ளை
    X

    பளுகல் அருகே வீடு புகுந்து நகை கொள்ளை

    • மர்ம நபர்கள் கைவரிசை
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை

    கன்னியாகுமரி:

    பளுகல் அருகே குழி விளாகம் மத்தம்பாலை பகுதியை சார்ந்தவர் அருண். இவர், பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார்.

    இப்போது இவர் ஊரில் உள்ளார். இவருடைய மனைவி செலின்மலர் இவர்கள் குடும்பத்துடன் மத்தம்பாலை பகுதியில் வசித்து வருகின்றனர். அருண் இன்று பெங்களூருக்கு செல்வதால் நேற்று இவர்கள் குடும்பத்துடன் பரக்குன்று பகுதியில் உள்ள செலின்மலரின் தாய் விட்டிற்கு சென்றுள்ளனர்.

    அங்கு தங்கி விட்டு இன்று அதிகாலை அருண் பெங்களூருக்கு கொண்டு செல்வதற்கு பொருட்கள் எடுக்க வீட்டிற்கு சென் றுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருண் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அறை கதவு உடைக்கப்பட்டு துணி மணிகள் சிதறி கிடந்தன. பக்கத்தில் சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 தங்க வளையல்கள் மற்றும் 3 கோல்ட் வாட்சுகள் போன்ற வற்றை ஏதோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பளுகல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பளுகல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற் கொண்டு பின்னர் கை ரேகை நிபூனர்கள் வரவ ழைத்து அவர்களும் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×