search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமியார் மீது கன்னியாகுமரி போலீசில் தி.மு.க.வினர் புகார்
    X

    சாமியார் மீது கன்னியாகுமரி போலீசில் தி.மு.க.வினர் புகார்

    • அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு கொடுத்தார்
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல்

    கன்னியாகுமரி :

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த உத்திரபிரதேச சாமியார் பரம்ஹன்ஸை கைது செய்ய வலியுறுத்தி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கன்னியாகுமரி போலீஸ் நிலை யத்தில்அகஸ்தீஸ் வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் பாபு தலைமையில் தி.மு.க.வினர் புகார் மனு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்த சாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர் பொன் ஜாண்சன், மாவட்ட பொறியாளர்அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட பிரதிநிதிகள் தமிழ்மாறன், வினோத், மெல்பின், முன்னாள் வார்டு கவுன்சி லர் தாமஸ் உள்பட ஏராள மான தி.மு.க.வினர் திரண்டு வந்து கன்னியாகுமரி போலீஸ் நிலை யத்தில் புகார்மனு அளித்தனர்.

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பிரிட்டோசேம் உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டு வந்து இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    சமூக வலைதளங்களில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் வெட்டியும், அவ தூறாகவும் பேசியுள்ளார். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என்றும் அறிவித்துள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி சமூகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா மீது வழக்குப்பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×