என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. அரசை கண்டித்து 20-ந்தேதி ஆர்ப்பாட்டம்
    X

    தி.மு.க. அரசை கண்டித்து 20-ந்தேதி ஆர்ப்பாட்டம்

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    • அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வது

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில நிர்வாகி கிருஷ்ணதாஸ், மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், முன்னாள் நகர செயலாளர்கள் சந்துரு, சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் அக்ஷயா கண்ணன், ஸ்ரீலிஜா, அணி செயலா ளர்கள் ராஜாராம், சுகுமாரன், ஒன்றிய செயலாளர் பொன் சுந்தர்நாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 20-ந்தேதி அண்ணா விளை யாட்டு அரங்கம் முன்பு நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திர ளாக கலந்து கொள்வது, உறுப்பினர்கள் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவத்தை பூர்த்தி செய்து வருகிற 19-ந்தேதிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைப்பது, மதுரையில் அடுத்த மாதம் 20-ந்தேதி நடைபெற உள்ள பொன்விழா எழுச்சி மாநாட்டில் குமரி மாவட்டத் தில் இருந்து அதிகப்படியான தொண்டர்கள், பொது மக்கள் கலந்து கொள்வது, வருகிற நாடாளுமன்ற தேர்த லில் அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனி சாமி சுட்டிக்காட்டும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வது என்பன உள்பட பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×