search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தே.மு.தி.க. பொதுக்கூட்டம்
    X

    தே.மு.தி.க. பொதுக்கூட்டம்

    • தே.மு.தி.க. சார்பாக நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம்
    • கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    தே.மு.தி.க. 19-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட தே.மு.தி.க. சார்பாக நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் இந்தியன் சுரேஷ், கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணை செயலாளர் ஆனிஸ் அலெக்ஸ் வரவேற்றார்.

    மாவட்ட அவைத்தலை வர் ராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் கேப்டன் ஜெகன், ராஜமோகன், ராஜேஷ், கிழக்கு பகுதி செயலாளர் நாஞ்சில் வெங்கட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி துணை செயலாளர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    கூட்டத்தில் வைகுண்ட ராஜா, சிவானந்த், செல்ல பெருமாள், ராஜாமணி, மறவை நாராயணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், ஊராட்சி, கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    Next Story
    ×