என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் தொடரும் மழை
- திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
- 3 அணைகளில் இருந்து 674 கன அடி தண்ணீர் திறப்பு
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரண மாக மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நாகர் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை, மாம்பழத்துறையாறு அணைகள் முழு கொள்ள ளவை எட்டி விட்டன. இதேபோல் சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2 அணை களும் வெள்ள அபாய அளவை கடந்து உள்ளது. 18 அடி கொள்ள ளவு கொண்ட 2 அணைகளிலும் தற்போது முறையே 15.88, 15.97 என்ற அளவில் நீர் மட்டம் உள்ளது. சிற்றாறு-1 அணைக்கு வரும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியாக பாய்கிறது.
இதன் காரணமாக திற்ப ரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளிய லிட்டு வருகின்றனர். இருப்பினும் அவர்கள் பாதுகாப்பாக குளிக்கவும், தண்ணீர் குறைவாக விழும் பகுதியில் நீராடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மூவாற்றுமுகம், குழித்துறை தாமிரபரணி ஆறு போன்றவற்றிலும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால், கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டுள் ளது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 42.93 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 484 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 174 கன அடி தண்ணீர் திறந்து விடப்படு கிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 72.13 அடியாக உள்ளது. விநா டிக்கு 470 கன அடி தண்ணீர் அணைக்கு வரும் நிலையில் 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அனைத்து அணை களுக்கும் தண்ணீர் வரத்து உள்ள நிலையில் 42.65 அடி கொண்ட பொய்கை அணைக்கு மட்டும் நீர்வ ரத்து இல்லாத நிலையே உள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 8.50 அடியாகவே உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 14.6, ஆரல்வாய்மொழி 10.2, மயிலாடி 9.4, குளச்சல் 8.2, கன்னிமார் 8.4, பூதப்பாண்டி 6.8, கொட்டாரம் 6.4, பாலமோர் 5, நாகர்கோவில் 4.2, குருந்தன்கோடு 4, களியல் 3.2, முக்கடல் அணை 3.2, இரணியல் 3, மாம்பழத்துறையாறு 3, முள்ளங்கினாவிளை 2.8, சுருளகோடு 2.4, ஆணைக் கிடங்கு 2.2, அடையாமடை 2.1, புத்தன் அணை 2, தக்கலை 2, பெருஞ்சாணி 1.8,
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்