search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தை காங்கிரசார் முற்றுகையிட்டு போராட்டம்
    X

    ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தை காங்கிரசார் முற்றுகையிட்டு போராட்டம்

    • சாலைப்பணியில் முறைகேடு நடந்திருப்பதாக தவறாக சித்தரித்ததாக புகார்
    • போலீசாருக்கும் காங்கிரசாருக்கும் இடையே வாக்குவாதம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு கோணம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

    இந்நிலையில் சாலை பணிகள் நிறைவு பெறும் முன்பே அப்பணிகள் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தவறாக சித்த ரித்து போஸ்டர் அடித்து பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளார். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் அவதூறு செய்துள்ளார்.

    மேலும் இதில் இந்த சாலைப்பணியில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அந்த நபர் போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட 5 பேர் மீது புகார் அளித்துள்ளார்.

    இது தொடர்பான விசாரணைக்கு நேற்று இரவு புகார் தெரிவிக்கப்பட்ட 5 பேருடன் காங்கிரசார் பலரும் ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.அப்போது புகார் அளித்த நபரை விசாரணைக்கு அழைக்கா மல் காங்கிர சாரை மட்டும் விசாரணைக்கு அழைத்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.

    பின்னர் ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மாமன்ற உறுப்பினர்கள் பிரவின் சிஜுன், சந்தியா சுப்ரமணியன், அருள் சபிதா உட்பட 50-க்கும் மேற்பட்டோர் ஆசாரிப்பள் ளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    போலீசார் போராட்டத் தில் ஈடுபட்ட காங்கிரசாரை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் காங்கிரசார் செல்ல மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீ சாருக்கும் காங்கிரசா ருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    பின்னர் எதிர் புகார் மனுதாரரை அழைத்து பேசுவதாக போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் கை விடப்பட்டது. இதை யடுத்து காங்கிரசார் மீது புகார் அளித்த நபர் மீது காங்கிரசார் ஆசாரிப்பள் ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    Next Story
    ×