search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவராத்திரி 2-ம் திருவிழாவையொட்டி பகவதி அம்மன் பவனி
    X

    நவராத்திரி 2-ம் திருவிழாவையொட்டி பகவதி அம்மன் பவனி

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • பக்தர்கள் தேவார பாடல் பாடினர்

    கன்னியாகுமரி:

    கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. கோவிலில் நவ ராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 2-ம் நாள்திருவிழா நேற்று வணிகவரித்துறை சார்பில்நடந்தது.

    இதையொட்டி நேற்று மாலை சமயஉரையும் அதைத்தொடர்ந்து பக்தி இன்னிசைக்க ச்சேரியும்நடந்தது. இரவு நெற்றிப்பட்டம்அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானைமுன்செல்ல வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனிவந்த நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது பக்தர்களின் தேவார பாடலுடன் அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

    3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்ட பத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தைமூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்ட ப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்ம னின் வாகன பவனி நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் நெல்லை கோட்ட வணிக வரி துறை இணை ஆணையர் சுகந்தி, நாகர்கோவில் துணை ஆணையர் கிருஷ்ணசாமி, தூத்துக்குடி துணை ஆணையர் சந்திரசேகர், வணிகவரித்துறைமாநில வரி அலுவலர்கள் (ஜி.எஸ் டி.) ராஜசேகரன், ராஜகோபால், முருகன், ராமசாமி சரக்கு மற்றும் சேவை வரி ஆலோசகர் வெங்கடகிருஷ்ணன்,

    ஆடிட்டர் சுரேஷ் கன்னியாகுமரிபோலீஸ் டி.எஸ்பி. ராஜா, கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் செயல்அலுவலர் ராஜேந்திரன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் தலைமை அலுவலக மேலாளர் வெங்கடேஷ்,

    கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க தலைவர் பால்சாமி செயலாளர்அரிகிருஷ்ண பெருமாள், பொருளாளர் வைகுண்டபெருமாள், துணைசெயலாளர் ஓம்நம ச்சிவாய,

    அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.3-ம்திருவிழாவான இன்று (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வருவாய்து றைசார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதில் நாகர்கோவில் ஆர்டிஓ சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர்காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து காலை 11-30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள்மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது.

    மாலையில் சாயரட்சை தீபாராதனையும் ஆன்மீக உரை மற்றும் பரதநாட்டியம் போன்றவைகளும் நடக்கிறது. இரவு8 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    Next Story
    ×