என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டம் சப்-இன்ஸ்பெக்டர்-போலீசார் மீது தாக்குதல்
- தலைமறைவான வாலிபரை பிடிக்க கேரளா விரைந்த போலீசார்
- 2 வாலிபர்கள் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதை பார்த்தனர்.
:குழித்துறை
மார்த்தாண்டம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், தலைமை காவலர் சகீர் மற்றும் போலீசார், தீபாவளியன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். நட்டாலம் பகுதியில் அவர்கள் சென்றபோது, 2 வாலிபர்கள் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதை பார்த்தனர்.
அவர்களை, சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் கண்டித்தனர். அப்போது போதையில் இருந்த 2 பேரும் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த அஜித் (வயது 24), அனீஷ் ஆகியோர் தான் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அஜித் கைது செய்யப்பட்டார். அனீஷ் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அனீஷை பிடிக்க போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்