search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
    X

    ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    • கணவன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
    • அவரது உடலை கணவனின் வீட்டின் முன்பு புதைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பரசேரி பகத்சிங் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது35) கொத்தனார். இவரது மனைவி சுபா லட்சுமி(25). இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்பொ ழுது சுபாலட்சுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    அய்யப்பன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுவந்தது. இந்தநிலையில் சுபாலட்சுமி வீட்டில் தூக்கில் பிணமாக தூங்கினார். இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து சுபாலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைய டுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர். ஆனால் சுபாலட்சுமி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுபாலட்சுமி சாவிற்கு அவரது கணவர் மற்றும் உறவினர்கள் 2பேர் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மேலும் அவரது உடலை கணவனின் வீட்டின் முன்பு புதைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினா ர்கள். இந்த பிரச்சினை தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் உடலை பெற்று கொள்வதாக கூறினார்கள். பின்னர் சுபாலட்சுமி உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

    Next Story
    ×