என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அருகே தொழிலாளி கொலை வழக்கில் கைது
    X

    குளச்சல் அருகே தொழிலாளி கொலை வழக்கில் கைது

    • செய்யப்பட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    • குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 60) தொழி லாளி. இவர் சம்பவத்தன்று வெட்டுமடை பகுதியில் உள்ள அம்மன் கோவில் முன்பு தூங்கி கொண்டி ருந்தார்.

    அப்போது அங்கு மது போதையில் வந்த கொட்டில்பாட்டை சேர்ந்த கவாஸ்கர் (25) நெல்லை மாவட்டம் களக்காடு சிதம் பரபுரத்தை சேர்ந்த சதீஷ் (25) ஆகிய இருவரும் கணேசனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கட்டையால் தாக்கியதில் கணேசன் இறந்தார். பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவாஸ்கர், சதீஷ் இருவரையும் கைது செய்த னர். கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். சதீஷ், கவாஸ்கர் மீது வேறு சில வழக்குகளும் இருந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் ஸ்ரீத ருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கவாஸ் கர், சதீஷ் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஷ்டி தலைமையிலான போலீசார் நாகர்கோவில் ஜெயில் அடைக்கப்பட்டி ருந்த கவாஸ்கர், சதீஷ் இருவரையும் பாளை யங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

    குமரி மாவட்டத்தில் இதுவரை இந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×