search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 9 ஒன்றிய நிர்வாகிகள் தேர்தலுக்கான விண்ணப்பம் இன்று வினியோகம்
    X

    குமரி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 9 ஒன்றிய நிர்வாகிகள் தேர்தலுக்கான விண்ணப்பம் இன்று வினியோகம்

    • குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும் மாநகராட்சி மேயருமான மகேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • தேர்தலுக்கான இடம், நாள் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறும்.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும் மாநகராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. 15-வது உட்கட்சி பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. குமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 9 ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனு வினியோகம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நாகர்கோவில் ஒழு கினசேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    தலைமை கழக பிரதிநிதி வக்கீல் அருள்தாசன் விண்ணப்ப படிவங்களை வழங்குகிறார். நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள கட்சியினர் காலை 10 மணிக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டு, அன்று மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்து விண்ணப்ப படிவங்களை உரிய கட்டணத்துடன் மாவட்ட அலுவலகத்தில் தலைமை கழக பிரதிநிதியிடன் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    வேட்பு மனுவை பரி சீலனை செய்து போட்டி யிருக்கும் ஒன்றிய கழகத் தேர்தலை நாளை (செவ் வாய்க்கிழமை) முதல் 9-ந் தேதிக்குள் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் செயலாளர் தேர்தல் நடைபெறும். தேர்தலுக்கான இடம், நாள் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×