search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் பெரியகுளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை
    X

    சுசீந்திரம் பெரியகுளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை

    • ஆயிரக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கியதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • மாநகராட்சியில் உள்ள கழிவுநீர் அந்த குளத்தில் கலந்து வருவதால் தான் மீன்கள் செத்து மிதப்பதாக குற்றச்சாட்டு

    நாகர்கோவில் :

    சுசீந்திரம் பெரியகுளம் தற்பொழுது பெய்த மழை யின் காரணமாக தண்ணீர் நிரம்பி வழிகிறது. பறவை கள் சரணாலயமாக அறிவிக் கப்பட்ட இந்த குளத்தில் தினமும் ஏராளமான வெளிநாட்டு பறவைகளும், உள்நாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன. இந்த நிலையில் இந்த குளத்தில் நேற்று மாலை திடீரென மீன்கள் செத்து ஒதுங்கியது. நேரம் செல்ல செல்ல ஆயிரக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கியதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத் திற்கு வந்து பார்வை யிட்டனர். மீன்வளத்துறை அதிகாரிகளும் செத்து போன மீன்களை ஆய்வு செய்தனர். தண்ணீரில் மாசு ஏற்பட்டு ஆக்சிஜன் குறைந்த தால் மீன்கள் செத்து மிதந்து இருக்கலாம் என்று கூறப்படு கிறது. இதுதொடர்பாக விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் மாநகராட்சியில் உள்ள கழிவுநீர் அந்த குளத்தில் கலந்து வருவதால் தான் மீன்கள் செத்து மிதப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த பிரச்சனை தொ டர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் கள். மீன்கள் குளத்தில் செத்து மிதப்பதால் துர் நாற்றம் வீசி வருகிறது. குளத்தில் செத்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்து வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×