search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சிப்பாறை வனப்பகுதியில் சுற்றி திரியும் புலியை பிடிக்க அதிரடி நடவடிக்கை
    X

    பேச்சிப்பாறை வனப்பகுதியில் சுற்றி திரியும் புலியை பிடிக்க அதிரடி நடவடிக்கை

    • வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை
    • கூண்டுகள் அமைத்து அதில் ஆடுகளை உள்ளே கட்டி வைத்து கண்காணித்து வந்தனர்.

    கன்னியாகுமரி :

    பேச்சிப்பாறை கோதையாறு அருகே மூக்கறைக்கல் என்ற பகுதியிலும் சிற்றாறு சிலோன் காலனி குடியிருப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களக காட்டில் இருந்து புலி வந்து குடியிருப்பு பகுதிகளில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடுகளை கடித்து கொன்றது. இதனால் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது. வனத்துறையினர் புலியை பிடிப்பதற்காக 2 பகுதிகளிலும் சுமார் 28-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்களை மாட்டி தேடி வந்தனர். புலி எந்த காமிராவிலும் தென்படவில்லை. இதையெடுத்து 3 கூண்டுகள் அமைத்து அதில் ஆடுகளை உள்ளே கட்டி வைத்து ஆட்டு கொட்டகை வடிவத்தில் அமைத்து கண்காணித்து வந்தனர்.

    உடனே புலி அதன் நடமாட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றி கொண்டது. புலியை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். சத்தியமங்கலம் வனத்துறையை சேர்ந்த புலியை பிடிப்பதில் திறம்பட வீரர்களான எலைட் படை வீரர்கள் அதிநவீன கருவிகளுடனும் 2 பிரிவுகளாக பிரிந்து சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். முண்டந்துறை வனப்பகுதி யில் இருந்து கால்நடை மருத்துவ குழுவினர் 2 பிரிவுகளாக பிரிந்து சென்று தேடி வருகின்றனர். புலியின் நடமாட்டத்தை பார்த்து மயக்க மருந்து ஊசி மூலம் செலுத்தி பிடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை வனத்துறையினர் தீவிரமாக இறங்கி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×