search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே விபத்து
    X

    தக்கலை அருகே விபத்து

    • மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்ற முதியவர் தவறி விழுந்து சாவு
    • தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள காடுவெட்டி முகமாற்றூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க நாடார் (வயது 72). இவர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரிக்கு செல்ல திட்டமிட்டார். வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், கோழிப்போர்விளை சந்திப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியே திருவனந்தபுரம் மூர்த்தி கோணம் பகுதியைச் சேர்ந்த நந்து என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரிடம் தங்கநாடார் லிப்ட் கேட்டு உள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட நந்து, அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார்.

    அமராவதி பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்ற போது, சாலையில் பள்ளம் இருந்தது. இதனை கடைசி நேரத்தில் கவனித்த நந்து, திடீரென பிரேக் போட்டு உள்ளார்.

    அப்போது பின்னால் உட்கார்ந்திருந்த தங்க நாடார் எதிர்பாராத விதமாக தவறி கீேழ விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை சிகிச்சை க்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தங்க நாடார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகள் மேரி ஐடா புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×