search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே நர்சிங் கல்லூரி மாணவி திடீர் மாயம்
    X

    இரணியல் அருகே நர்சிங் கல்லூரி மாணவி திடீர் மாயம்

    • பெர்ஷியாள் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். நர்சிங் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்
    • நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவி திடீரென காணாமல் போன சம்பவம் பெற்றோர் மற்றும் மாணவிகளிடையே பரபரப்பு

    கன்னியாகுமரி :

    பூதப்பாண்டி அருகே வடக்கு அரசன்குழியை சேர்ந்தவர் பெனட். இவரது மகள் பெர்ஷியாள் (வயது 18).

    பெர்ஷியாள் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். நர்சிங் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நர்சிங் கல்லூரிக்கு சென்ற மாணவியை திடீரென காணவில்லை.

    பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாணவியின் தாயார் ஜாக்குலின்ஷீபா விடுதிக்கு சென்று பார்த்தார். அங்கு மாணவியை காணவில்லை.

    இது குறித்து ஜாக்கு லின்ஷீபா இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவி திடீரென காணாமல் போன சம்பவம் பெற்றோர் மற்றும் மாணவிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    Next Story
    ×