search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதப்பாண்டி அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது
    X

    பூதப்பாண்டி அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது

    • நெல்சனை அரிவாளால் வெட்டி ரிச்சர்டு கொலை செய்தார்.
    • ரிச்சர்டை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுப டுபவர்களை போலீ சார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகிறார்கள். சமீபகாலமாக பிடி வாரண்டு குற்றவாளிகள் மீதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தலைமறைவு குற்றவாளி களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகிறார்கள். இந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட தொழிலாளி ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பூதப்பாண்டி அருகே நாவல்காடு பகுதியை சேர்ந்தவர் நெல்சன் (வயது 57), தொழிலாளி. இவரு க்கும், அதே பகுதியை சேர்ந்த ரிச்சர்டு என்ற நிச்சர் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் நெல்சனை அரிவாளால் வெட்டி ரிச்சர்டு கொலை செய்தார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரிச்சர்டை கைது செய்து ஜெயிலில் அடை த்தனர். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்து ரை செய்தார்.

    இதையடுத்து ரிச்சர்டை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவரை போலீசார் இன்று பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×