search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே மாற்றுத்திறனாளி திடீர் சாவு
    X

    இரணியல் அருகே மாற்றுத்திறனாளி திடீர் சாவு

    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து எவ்வாறு இறந்தார்? என்ன காரணம் என விசாரணை

    இரணியல், ஜூலை.25-

    இரணியல் அருகே உள்ள மணக்கரை புதுக்கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 44), மாற்றுத்திறனாளி. இவரது மனைவி ரதி (35). இவர் அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வீட்டு வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் ரதி வீட்டு வேலைக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பி உள்ளார்.

    அப்போது வீட்டு கட்டிலில் கிறிஸ்டோபர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கிறிஸ்டோபர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரதி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்டோபர் எவ்வாறு இறந்தார்? என்ன காரணம் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×