search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் படுகாயம்
    X

    மண்டைக்காடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் படுகாயம்

    • படுகாயம் அடைந்த சிறுவனுக்கு நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • 15 வயது சிறுவன் மற்றும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு கொடுத்ததாக சிறுவனின் தந்தை நெல்சன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமாரி:

    மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலம் மருதிவிளையை சேர்ந்தவர் ராஜன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் டாரியோ (வயது6). புதூரில் ஒரு தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறான்.

    சம்பவத்தன்று டாரியோ தனது அக்கா, பாட்டி தங்கத்துடன் உறவினர் வீட்டிற்கு செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளான். அப்போது அந்த வழியாக சக்கப்பற்றை சேர்ந்த 15 வயது சிறுவன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் டாரியோ மீது மோதியது. இதில் டாரியோவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினர் டாரியோவை மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து டாரியோ வின் தாய் டோன் ஜெரின் பபி மண்டைக்காடு போலீ சில் புகார் செய்தார். போலீ சார் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற சக்கப்பற்றை சேர்ந்த 15 வயது சிறுவன் மற்றும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு கொடுத்ததாக சிறுவனின் தந்தை நெல்சன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×