search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடையில் 820 லிட்டர் மண்எண்ணை பறிமுதல்
    X

    புதுக்கடையில் 820 லிட்டர் மண்எண்ணை பறிமுதல்

    • போலீசார் வாகனத்துடன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் விசாரித்தனர்.
    • கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கடற்கரை பகுதிகளில் மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகின்ற மண்எண்ணை அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மணக்குடி பகுதியில் இருந்து கேரளாவுக்கு மானிய விலைமண்எண்ணை கடத்துவதாக புதுக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    புதுக்கடை தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு சுனில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், நிலைய காவலர் கிங்ஸ்லி, ஆகியோர் கைசூண்டி சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக சென்ற பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் 50 லிட்டர் கொள்ளளவுள்ள 15 கேன்கள், மற்றும் 35 லிட்டர் கொள்ளளவுள்ள 2 கேன்களில் சுமார் 820 லிட்டர் அரசின் மானிய விலை மண்எண்ணை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. தொடர்ந்து வாகனத்துடன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் விசாரித்தனர்.

    விசாரணையில் குளச்சல் பகுதி சிலுவைதாசன் மகன் ஆன்டனி (வயது 27) என்பவர் மேலகிருஷ்ணன் புதூர் பகுதி ரமேஷ் (31) என்பவரின் வாகனத்தில் கேரளாவுக்கு இவற்றை கடத்துவது தெரிய வந்தது. மணக்குடி கடற்கரை பகுதியில் இருந்து கொண்டு செல்வதும் தெரிய வந்தது. போலீசார் கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×