search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசேரியில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
    X

    வடசேரியில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

    • மோட்டார் சைக்கிள் - செல்போன்கள் பறிமுதல்
    • கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா, புகையிலை நடமாட்டத்தை கண்காணிக்க 7 தனிப்படை கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இதை யடுத்து தற்பொழுது கஞ்சா விற்பனை சற்று கட்டுக்குள் இருந்து வருகிறது.

    இருப்பினும் வெளி மாநிலங்களில் இருந்து கொரியர் மூலமாக கொண்டு வரப்பட்டு கஞ்சாவை விற்பனை செய்து வருகிறார்கள். குறிப்பாக ஆந்திராவில் இருந்து அதிக அளவில் கஞ்சா புழக்கத்தில் கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இதை கட்டுப்படுத்தவும் போலீ சார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் வெட்டூர்ணி மடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்த போது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்களிடம் விசா ரணை நடத்திய போது, வாத்தியார் விளையை சேர்ந்த அஜீத், பெரு விளையை சேர்ந்த செல்வன் என்பது தெரிய வந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.இவர்கள் பரமார்த்தலிங்க புரத்தைச் சேர்ந்த ஜெரீஸ் என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.அஜித், செல்வன்,ஜெரீஸ் ஆகியோர் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அஜித் மீது ஏற்கனவே இரணியல், நேசமணி நகர், ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இதே போல் செல்வன் மீதும் இரணியல் மற்றும் வடசேரி போலீசில் வழக்கு கள் உள்ளது. தலைமறை வாக உள்ள ஜெரீசை பிடித்தால் தான் கஞ்சா எங்கிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது என்ற விவரம் தெரியவரும். எனவே அவரை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பொற்றேல்கானத்து கோணம் பகுதியைச் சேர்ந்தவர் அனி (26). இவர் மேல்புறம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையிலான போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று அனியை பிடித்து அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது அந்தப் பையில் சின்னச்சின்ன பொட்ட லங்களாக 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனியை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    Next Story
    ×