என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் 1½ கிலோ கஞ்சா பறிமுதல் தொழிலாளி கைது
    X

    நாகர்கோவிலில் 1½ கிலோ கஞ்சா பறிமுதல் தொழிலாளி கைது

    • சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
    • வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி போலீசார் அறுகுவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் சுயம்பு லிங்கம் என்ற கட்டலிங்கம் (வயது 45) என்பதும், அவர் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான சுயம்பு லிங்கம் மீது கஞ்சா வழக்கு உள்பட மொத்தம் 18 வழக்குகள் உள்ளன.

    Next Story
    ×