search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே வீட்டில் ரத்த காயங்களுடன் சுய நினைவின்றி கிடந்த பெண்
    X

    கோப்பு படம் 

    திருவட்டார் அருகே வீட்டில் ரத்த காயங்களுடன் சுய நினைவின்றி கிடந்த பெண்

    • மகள் புகாரின் பேரில் போலீசார் விசாரணை
    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள கொக்கவிளை, சாரூர் பகுதியை சேர்ந்தவர் கமலதாஸ் (வயது60), செங்கல்சூளை தொழிலாளி.

    இவருக்கு லைலா (47) என்ற மனைவியும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கமலதாசும் அவருடைய மனைவி லைலாவும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

    நேற்று மாலை கமலதாஸ் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்தார்.அப்போது மனைவி லைலா சுயநினைவின்றி ரத்தக் காயங்களுடன் அங்கு கிடந்து உள்ளார். இதனை பார்த்து கமலதாஸ் அதிர்ச்சி அடைந்தார்.

    லைலாவின் இடதுபக்கம் நெற்றி மற்றும் கன்னத்தில் பலத்த காயங்கள் காணப் பட்டன.கமலதாஸ் பக்கத்து வீட்டை சேர்ந்த சுபின், எட்வின் ஆகியோர் உதவியுடன், மனைவியை மீட்டு ஆற்றூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி பெற்ற பிறகு மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு லைலாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சம்பவம் குறித்து கமல தாஷின் மகள் அனிஷா, திருவட்டார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×