search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறக்கையில் தாய் மகள் மாயம்
    X

    கோப்பு படம் 

    பறக்கையில் தாய் மகள் மாயம்

    • அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் சுசிந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்
    • சுசிந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான தாய், மகளை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜோயல் (வயது 35). இவர் வங்கியில் தினசரி கலெக்சன் வேலைக்கு சென்று வருகிறார்.

    கடந்த 2-ந்தேதி வேலைக்கு சென்றார். இவர் மாலை வீட்டிற்கு வந்தபோது, மனைவி ஜெர்லின் (27), மகள் ஜெர்சிகா (9), ஆகியோரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து சுசிந்திரம் போலீஸ் நிலையத்தில் ஜோயல் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான தாய், மகளை தேடி வருகின்றனர். வீட்டில் இருந்த தாய், மகள் காணாதது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×