search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் கட்டையன்விளை ரேஷன் கடையில் மேயர் மகேஷ் ஆய்வு
    X

    ரேஷன் கடையில் மேயர் மகேஷ் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.

    நாகர்கோவில் கட்டையன்விளை ரேஷன் கடையில் மேயர் மகேஷ் ஆய்வு

    • பொதுமக்களிடம் குறைகள் கேட்டார்
    • சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோயில் மாநக ராட்சி பகுதியில் வார்டு வார்டாக சென்று மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    இந்த ஆய்வின் போது மக்கள் தெரிவிக்கும் குறை களை சரி செய்யவும், வார்டுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு வரு கிறார்.

    அதன்படி முதற்கட்டமாக மாநகராட்சியை தூய்மைப் படுத்தவும், சாக்கடை கால்வாய்களை தூர்வாரி சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சாலை களின் குறுக்கே தடுப்புகள் அமைத்து இரு வழிச் சாலை யாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று 5-வது வார்டுக்கு உட்பட்ட கட்டையன்விளை பகுதியில் மேயர் மகஷே் ஆய்வு மேற்கொண்டார். பொது மக்கள் கோரிக்கையை ஏற்று கழிவு நீர் தொட்டிகள் அமைக்க ரூ.11 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்து தொட்டிகள் அமைக்கப்பட உள்ள இடங்களை அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    அதனை தொடர்ந்து கட்டயன் விளை ரேஷன் கடை மற்றும் வேலை முடிவுற்று திறப்பதற்கு தயார் நிலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தையும் பார்வை யிட்டார். தொடர்ந்து பொது மக்க ளிடமும் குறைகளை கேட்ட றிந்தார்.

    ஆய்வின்போது மாநகர பொறியாளர் பாலசுப்பிர மணியன், மாநகர நல அதி காரி ராம்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்த னர். இதைத் தொடர்ந்து விவசாய சங்கம் சார்பில் 45-வது வார்டு தாராவிளை பகுதியில் விவசாய இடு பொருட்கள் கொண்டு செல்ல வசதியாக சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×