search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர். தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை
    X

    கோப்பு படம் 

    நாகர். தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை

    • சி.சி.டி.வி. காமிராவில் 2 கொள்ளையர் உருவம் சிக்கியது
    • தனிப்படை போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே அப்சர்வேட்டரி தெரு சேர்ந்தவர் யூஜின்தாஸ் (வயது 70), தொழில் அதிபர்.

    இவரது மனைவி கமலா இவருடைய மகள் சென்னையில் டாக்டராக உள்ளார். இதனால் யூஜின் தாஸும் கமலாவும் கடந்த 2-ந்தேதி மகளைப் பார்க்க சென்னைக்கு சென்ற னர். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் சென்னை சென்ற யூஜின்தாஸ் வந்துவிட்டதாக கருதி அவரை பார்ப்பதற்காக சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவும் உடைக்கப்பட்டிருந்தது.

    இதனால் அவர், யூஜின் தாஸ் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் யூஜின் தாஸ் வீட்டிற்கு வந்தனர். பின்னர் யூஜின்தா சுக்கும் நேசமணி நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினார்கள்.அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோக்களும் திறந்து இருந்தது. இருந்து நகை பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றி ருந்தனர். வீட்டில் இன்னொரு அறையில் இருந்த நகைகள் கொள்ளை போகாமல் இருந்ததும் கண்டுபிடிக் கப்பட்டது.

    இதனால் எவ்வளவு நகை பணம் கொள்ளை யடிக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசார ணை நடத்தினார்கள்.யூஜின்தாஸ் ஊருக்கு வந்தால்தான் எவ்வளவு நகை கொள்ளை அடிக்கப் பட்டது என்பது குறித்த விவரம் தெரியவரும். இதையடுத்து கைரேகை நிபுணர்களும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளைபதிவு செய்தனர்.

    மேலும் மோப்பநாய் வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. யாரை யும் கவ்வி பிடிக்கவில்லை. போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளை யர்கள் இரண்டு பேரின் உருவம் அதில் பதிவாகி இருந்தது. அந்த காட்சி களை போலீசார் கைப்பற்றி யுள்ளனர். யூஜின்தாஸ் ஊரில் இல்லாததை நோட்டமிட்டே கொள்ளையர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள் ளனர்.

    எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்க ளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கெர்ளளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×