search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விசைப்படகு மீனவர்கள் முற்றுகை போராட்டம்
    X

    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம். 

    மீன் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விசைப்படகு மீனவர்கள் முற்றுகை போராட்டம்

    • சின்னமுட்டம் துறைமுகத்தில் இன்று நடந்தது
    • ஆழ்கடலில் சாளை மீன் பிடிக்க அனுமதி வழங்க கோரிக்கை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    சின்னமுட்டம் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்கள் ஆழ் கடலில் தங்கி மீன்பிடிப்பதற்கும் சாளை மீன் பிடிப்பதற்கும் மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.

    இந்த நிலையில் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரி இன்று காலை சின்ன முட்டம் துறைமுகத்தில் உள்ள கன்னியாகுமரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனர் விர்ஜின் கிராசிடம் முறையிட்டனர். அதற்கு மீன் வளத்துறை உதவி இயக்குனர் அனுமதி அளிக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையில் கன்னியாகுமரி, சின்ன முட்டம் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் 6 விசைப்படகு சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் விசைப்படகு மீனவர்கள் சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள கன்னியாகுமரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் நிலவியது. இதையடுத்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்ன பாலா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவட்டவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×