search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கற்பழிப்பு வழக்கில் இருந்து தப்ப பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது
    X

    கோப்பு படம் 

    கற்பழிப்பு வழக்கில் இருந்து தப்ப பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது

    • உடந்தையாக இருந்த தந்தையும் சிக்கினார்
    • திருமணத்தில் பங்கேற்றவர்களிடமும் விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளையை அடுத்த நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் அல் அமீர் (வயது 23).

    இவர் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் அல் அமீர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்பு அவர் தன்மீது வழக்கு தொடர்ந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து சமரசம் பேசியுள்ளார்.

    அப்போது மாணவியை அவரே திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அல்அமீருக்கும், மாண விக்கும் கடந்த 18-ந் தேதி திருமணம் நடந்துள்ளது.

    மைனர் பெண்ணை அல்அமீர் திருமணம் செய்த தகவல் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தெரியவந்தது.அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மைனர் பெண்ணை திருமணம் செய்ததாக அல்அமீரை கைது செய்தனர்.மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தந்தை மற்றும் திருமணத்தை நடத்தி வைத்தவர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த திருமணத்தில் பங்கேற்றவர்களிடமும் சம்பவம் குறித்து விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×