search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி
    X

    கோப்பு படம் 

    குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி

    • 3 பேர் படுகாயம் அடைந்தனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே வாணி யக்குடி ஆனப்பான்குழியை சேர்ந்தவர் ஜூடி. இவரது மகன் ஜெபின் (வயது 19).ஜெபின் வெள்ளமோடி அருகே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல் ஜெபின் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார்.மோட்டார் சைக்கிளின் பின்னால் கோடிமுனையை சேர்ந்த மாணவர் ஜெனிஸ்டன் அமர்ந்திருந்தார். மோட்டார் சைக்கிள் குளச்சல் பெரிய பள்ளி முக்கு சந்திப்பு அருகே செல்லும்போது திடீரென நிலை தடுமாறி எதிரே புத்தளம் சேதுபதிவூரை சேர்ந்த தொழிலாளி குமார் (57) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. குமாரின் பின்னால் மற்றொரு தொழிலாளி சரவணன் உட்கார்ந்திருந்தார்.

    இந்த சம்பவத்தில் 2 மோட்டார் சைக்கிள் களில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படு காயமடைந்தனர்.அப்பகுதி யினர் அவர்களை மீட்டு உடையார்விளையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெபின் பரிதாப மாக இறந்தார். ஜெனிஸ்டன், குமார், சரவணன் ஆகிய 3 பேரும் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தொழிலாளி குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான ஜெபின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    Next Story
    ×