search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் பலி
    X

    விபத்தில் பலியான வில்லியம்

    குமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் பலி

    • இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்த போது போர் ஏற்பட்டதால் இந்தியா திரும்பினார்.
    • இந்தியாவில் மற்றொரு தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கி பயின்று வந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் நாயகம். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் வில்லியம்.

    இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்த போது போர் ஏற்பட்டதால் இந்தியா திரும்பினார். இதுதொடர்பாக இந்தியா வில் மற்றொரு தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கி பயின்று வந்தார்.

    இதற்கிடையே தனது நண்பர்கள் 6 பேருடன் இருசக்கர வாகனத்தில் இமாச்சலபிரதேசத்துக்கு சுற்றுலா சென்றார். அப்போது அங்கு எதிர்பா ராத விதமாக ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மாணவன் வில்லியம் பரிதா பமாக பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது தந்தை வெளி நாட்டிலிருந்து தாயகம் வருகிறார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. விபத்தில் பலி யான மாணவர் வில்லியமின் தாயார் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்

    Next Story
    ×