search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் இருந்து தாயாரை பார்க்க வந்த  மத்திய உளவு பிரிவு அதிகாரி மாயம்
    X

    ஜெயசிங்

    சென்னையில் இருந்து தாயாரை பார்க்க வந்த மத்திய உளவு பிரிவு அதிகாரி மாயம்

    • மனைவி போலீசில் புகார்
    • திருவட்டார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மத்திய உளவுத்துறை அதிகாரி ஜெயசிங்கை தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    சென்னை கே.கே. நகர் பகுதியில் அமைந்துள்ள மத்திய பொதுப்பணித்து றைக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெயசிங் (வயது 46) இவரது மனைவி நிஷாகுமாரி (39).

    ஜெயசிங் அந்தமானில் உள்ள மத்திய உளவுதுறை யில் ஜூனியர் இன்டலி ஜென்ட்ஸ் அலுவலராக (ஜே.ஜ.ஓ) பணிபுரிந்து வருகிறார் கடந்த மாதம் 25-ந்தேதி விடுமுறையில் சென்னைக்கு வந்தவர்

    கடந்த 11-ந்தேதி காட்டாத்துறை யில் உள்ள தனது தாயார் குமரி தங்கத்தை பார்க்க வந்தார். மறுநாள் சென்னைக்கு செல்வதாக தன் தாயிடம் கூறிவிட்டு சென்றார். போகும்போது தன் செல்போனை மறந்து வைத்துவிட்டு சென்றார். மறுநாள் சென்னக்கு சென்று சேரவேண்டிய ஜெயசிங் வீட்டுக்கு போகவில்லை.

    உடனே இவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் ஜெயசிங் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.இந்த நிலையில் தன் கணவரை காணவில்லை என்று திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மத்திய உளவுத்துறை அதிகாரி ஜெயசிங்கை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×