வடசேரியில் 1¾ கிலோ கஞ்சாவுடன் 4 வாலிபர்கள் கைது

சென்னையில் இருந்து வாங்கி வந்தது அம்பலம்போலீசார் வடசேரி பஸ் நிலையத்தில் ரோந்து
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் கன்னியாகுமரி, நாகர் கோவில், தக்கலை, குளச் சல் சப்-டிவிசன்களுக் குட்பட்ட பகுதிகளில் போலீ சார் காலை, மாலை நேரங்களில் ரோந்து பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கஞ்சா விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து வருவதுடன் அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கி வருகிறார்கள்.

வடசேரி சப்-இன்ஸ் பெக்டர் ஜான்விக்டர் தலைமையிலான போலீசார் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்ப டும்படியாக நின்று கொண்டிருந்த 4 வாலி பர்களை பிடித்து விசா ரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் களை தெரிவித்த னர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட் டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்த ஒரு கிலோ 700 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 4 நபர்களையும் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் கள் தெற்குச்சூரங்குடி யைச் சேர்ந்த ரியாஸ் கான் (வயது 20), முகமது ரியாஸ் (23), முகமது அல்தாப் (24), பூதப்பாண்டியைச் சேர்ந்த பூதலிங்கம் (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்த னர்.

கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப் பட்டது? என்பது குறித்து விசா ரணை நடத்தப்பட் டது. முதல் கட்ட விசார ணையில் கஞ்சா சென்னை யிலிருந்து வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com