search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும்
    X

    விஜய்வசந்த் எம்.பி. மத்திய மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தபோது எடுத்த படம் 

    குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும்

    • மத்திய மந்திரியிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை
    • ஒப்பந்தத்தை இறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும்‌

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த், டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து ஒரு மனு அளித்தார்.

    அதில், காரோடு முதல் கன்னியாகுமரி வரை 4 வழிச்சாலை பணிகள் நடை பெற்று வந்த நிலையில், கல், மண் தட்டுப்பாடு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. பணி முடங்கிய காரணத் தால் ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டது.

    பின்னர் மாநில அரசு அண்டை மாவட்டத்நிதின் கட்கரியை சந்தித்து ஒரு மனு அளித்தில் இருந்து மண் எடுப்பதற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து மீண்டும் இந்த பணிக்கான ஒப்பந்தத்திற்கு மறு டெண்டர் கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரம் விடப்பட்டது.

    இந்த டெண்டர் வருகிற 19-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்நாள் வரை டெண்டர் முடிவு செய்யப் படாமல் உள்ளது. பல்வேறு காரணங்களால் முடங்கி கிடக்கும் 4 வழிச் சாலை பணிகள் மீண்டும் தொடங்க தாமதமானால் இந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது.

    எனவே இதை கருத்தில் கொண்டு தாங்கள் அலுவலகம் வாயிலாக நெடுஞ்சாலை துறையிடம் உடனடியாக 4 வழி சாலை பணிக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×