search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    490 கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள்
    X

    அர்ச்சகர்களுக்கு புத்தாடைகளை மேயர் மகேஷ் வழங்கிய காட்சி.

    490 கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள்

    • பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்பட்டது
    • விழாவில் மேயர் மகேஷ் கலந்து கொண்டு வழங்கினார்

    நாகர்கோவில்:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி அர்ச்சகர்களுக்கு புத்தாடை களும் பணியாளர்களுக்கு சீருடைகளும் வழங்கப்படுகிறது.

    குமரி மாவட்டத்தை பொருத்த மட்டில் 490 கோவில் களில் பணிபுரியும் அர்ச்ச கர்களுக்கு புத்தாடை களும் பணியாளர்களுக்கு சீருடைகளும் வழங்குவ தற்கான தொடக்க விழா நாகர்கோவில் நாகராஜா கோவில் வளாகத்தில் இன்று நடந்தது. விழாவிற்கு இணை ஆணையர் ஞானசேகர் தலைமை தாங்கினார்.

    விழாவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் மேயருமான மகேஷ் கலந்து கொண்டு அர்ச்சகர்களுக்கு புத்தாடை களையும் பணியாளர்களுக்கு சீருடைகளையும் வழங்கினார். அப்போது மேயர் மகேஷ் பேசியதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப் பேற்றதும் கோவில்கள் மேம்பாட்டிற்கு தனி கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள கோவில்கள் கும்பாபிஷே கத்திற்காக ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வரு கிறது.

    தி.மு.க. அரசு பொறுப் பேற்ற பிறகு கோவில் பணி யாளர்களுக்கான சம்ப ளத்தை உயர்த்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் 100 கோவில்களை புனர மைக்க ரூ.5 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது கோவில்களில் புனரமைப்பு பணி நடை பெற்று வருகிறது. பறக்கைப் பகுதியில் கூருடைகண்டன் சாஸ்தா கோவில் இயற்கை எழில் கொஞ்சும் வயல் பகுதியில் உள்ளது.வயல் வரப்பு வழியாக சென்று தான் அந்த கோவிலில் பூஜைகள் செய்ய வேண்டும்.

    இந்த கோவிலில் வயல் அறுவடை மற்றும் நடவு பணியின்போது மட்டுமே பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த கோவிலை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த கோவிலை நான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். வாரம் 2 நாட்கள் பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவில் அர்ச்சகர்களும் பணியாளர்களும் அதிகம் பயன்பெறும் வகையில் ஒரு அரசு செயல்படுகிறது என்றால் அந்த அரசு தி.மு.க. அரசாகத்தான் இருக்க முடியும். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவில் பணியாளர்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவ டிக்கை எடுத்து வருகிறார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர் கவுன்சிலர்கள் கலா ராணி, ரோசிட்டா மராமத்து பொறியாளர் அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×