என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரத்தில் என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொலை
- நேற்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஓடஓட விரட்டிக் கொலை.
- சுற்றி வளைத்தபோது போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் சுட்டுக்கொலை.
காஞ்சிபுரத்தில் நேற்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்ற சரவணன் மர்ம நபர்களால் ஓடஓட விரட்டி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களை பிடிப்பதற்காக தீவிரமாக தேடிவந்தனர். இந்த கொலை வழக்கும் பிரபல வசூல் ராஜா ரவுடியின் கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.
ரகு மற்றும் அசேன் ஆகிய இருவரும் முக்கிய குற்றவாளி எனத் தெரியவந்தது. இருவரும் ரெயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த நிலையில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது இருவரும் தப்பியோட முயற்சி செய்த நிலயில், தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சிறப்பு காவல் உதவியாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் இருவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர்.
உடனே உதவி ஆய்வாளர் சுதாகர், இருவரையும் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது குண்டு பாய்ந்து இருவரும் சரிந்தனர். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்ததாக அறிவித்தனர்.
ரவுடி கொலையில் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்