search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜகிரி காமாட்சி அம்மன் கோவில் திருவிழா
    X

    பக்தர்கள் கரகம், காவடி, பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தடைந்தனர்.

    ராஜகிரி காமாட்சி அம்மன் கோவில் திருவிழா

    • பக்தர்கள் முக்கிய வீதி வழியாக கரகம் காவடி பால்குடம் கோவிலை வந்தடைந்தனர்.
    • பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு தீராதனை காண்பிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே ராஜகிரியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் 19-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் (மே) 25-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவை யொட்டி ராஜகிரி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் கரகம், காவடி, பால்குடம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர், அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, சிறப்பு தீபாராதனை காண்பி க்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, மாலையில் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து அம்மன் வீதிஉலா தப்பாட்டம், வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், நாட்டாமை, பஞ்சாயத்தார்கள், கிராமமக்கள்பக்தர்கள் கரகம், காவடி, பால்குடம், முளைப்பாரி எடுத்து செய்திருந்தனர்.


    Next Story
    ×