search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திசையன்விளையில் காமராஜர் பிறந்தநாள் விழா 120 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்
    X

    விழாவை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

    திசையன்விளையில் காமராஜர் பிறந்தநாள் விழா 120 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாட்டம்

    • விழாவை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், முதியோர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது.
    • சிறப்பு நிகழ்ச்சியாக 120 பானைகளில் பொங்கலிட்டு பெண்கள் காமராஜருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்

    திசையன்விளை:

    திசையன்விளை கிங்மேக்கர் காமராஜர் டிரஸ்ட் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. டிரஸ்ட் தலைவர் செல்வபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களையும், முதியோர்களுக்கு ஆடைகளையும் வழங்கினார்.

    சிறப்பு நிகழ்ச்சியாக 120 பானைகளில் பொங்கலிட்டு பெண்கள் காமராஜருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர். விழாவில் வியாபாரிகள் சங்கமாநில இணைச்செயலாளர் தங்கையாகணேசன், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், வக்கீல் ஜெயபாலன், காமராஜர் டிரஸ்ட் துணைத்தலைவர் ராஜபாண்டி, பொதுச்செயலாளர் முருகன், துணைச்செயலாளர்கள் சித்திரை கணேசன், நித்யானந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×