search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில்  முப்பெரும் விழா
    X

    ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் முப்பெரும் விழா

    • முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என முப்பெரும் விழா நடைபெற்றது.
    • கல்லூரியின்ஆண்டு மலரான பார்ம சாகா 30-வது தொகுப்பை பற்றி விளக்கினார்.

    ஊட்டி,

    ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.பி. தனபால் அனைவரையும் வரவேற்றார். முனைவர்கள் கே.பி. அருண் மற்றும் சத்திய நாராயணா ஆகியோர் கல்லூரி ஆண்டறிக்கையை வழங்கினர். மருந்தியல் துறை தலைவர் டாக்டர் கே.கவுதமராஜன் கல்லூரியின்ஆண்டு மலரான பார்ம சாகா 30-வது தொகுப்பை பற்றி விளக்கினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக கேரளா மாநிலம் செருத்துத்தியில் அமைந்துள்ள பஞ்சகர்மா தேசிய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் சுதாகர் கலந்து கொண்டார்.

    கவுரவ விருந்தினராக பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி.பிருந்தா, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவ இயக்குநரும், டாக்டருமான பரந்தாமன், அபெக்ஸ் மருத்துவ நிறுவன உதவி பொது மேலாளர் ராஜ்குமார், மைசூர் எஸ்.எஸ்.மஹாவித்யாபீட மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர்.ஆர்.மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மருந்து வேதியியல் துறை தலைவர் டாக்டர் காளிராஜன் நன்றி கூறினார். விழாவில் சிறந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×