என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெ.எஸ்.எஸ். கல்லூரி சார்பில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் விழிப்புணர்வு முகாம்
- முகாமில் 30-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
- முகாமில் பெண்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.
ஊட்டி,
ஜெ.எஸ்.எஸ். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழுமம், புதுடெல்லி அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆகியவை சார்பில் மகப்பேறு மற்றும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு முகாம், அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்றது.
இதில் காப்பக அலுவலர் சோபனா மற்றும் 30-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். நிர்வாக செயலாளர் கோமதி சுவாமிநாதன் வரவேற்றார். மருந்தாக்கவியல் வேதியியல் துறை தலைவர் காளிராசன், நிர்வாக செயலர் பிரியங்கா முன்னிலை வகித்தனர்.
ஆய்வு மாணவர்கள் நாகர்ஜுனா, தினேஷ்குமார், நீரு ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். அப்போது கல்லூரி பேராசிரியர்கள் ஜவகர், ஜுபி, கோமதி சானீஸ், சண்முகம் ஆகியோர் மகப்பேறு, மாதவிடாய் மற்றும் மனநலத்தின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து பேசினர்.
பெண்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பார்த்திபன், பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி, சம்பத்குமார், ஈரோடு காலேஜ் ஆப் பார்மசி முதல்வர் பூங்குழலி உள்பட பலர் பஙகேற்றனர். பேராசிரியர் ஷீகாந்த் ஜுப்டி, நன்றி கூறினார்.






