என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூட்டிய வீட்டில் நகை- பணம் திருட்டு
- பீரோவில் இருந்த 5 கிராம் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போனது.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள களிமேடு கிராமத்தை சேர்ந்தவர் தன்மானன். இவரது மனைவி தெய்வ கன்னி (வயது 40).
இந்த நிலையில் வெளியூர் செல்வதற்காக தெய்வகன்னி தனது மகன் விக்னேஸ்வரன், பாட்டி ஆகியோருடன் தஞ்சை ரயில் நிலையத்திற்கு சென்றார்.
பின்னர் அவர்க ளை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு விக்னேஸ்வரன் மட்டும் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 முக்கால் கிராம் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகிய வற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது .
உடனடியாக விக்னேஸ்வ ரன் தனது தாய் தெய்வ கன்னிக்கு தகவல் தெரி வித்தார்.
அதன் பேரில் அவரும் உடனே வீடு திரும்பினார்.
இது குறித்த அவர் கள்ளப் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






