என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் மெஸ் உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
- கார்த்திக் மெஸ் வைத்து நடத்தி வருகிறார்.
- கார்த்திக் நகை, பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பங்களா மேட்டை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). இவர் அந்த பகுதியில் மெஸ் வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று பட்டப்பகலில் கார்த்திக்கின் வீட்டிற்குள் மர்மநபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், வளையல் உள்பட 9 பவுன் தங்க நகைகள், ரூ.45 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய கார்த்திக் நகை, பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
Next Story






