search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு என அழைப்பது தான் சரியானது- கவர்னரின் கருத்துக்கு ஜெயக்குமார் பதில்
    X

    தமிழ்நாடு என அழைப்பது தான் சரியானது- கவர்னரின் கருத்துக்கு ஜெயக்குமார் பதில்

    • அ.தி.மு.க. அண்ணா வழியில் வந்த கட்சி. பெயரிலேயே அண்ணாவை கொண்டுள்ளோம்.
    • தமிழ்நாடு என்ற பெயர் நமது வரலாற்றையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் பெயராகும்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அண்ணா வழியில் வந்த கட்சி. பெயரிலேயே அண்ணாவை கொண்டுள்ளோம். 1963-ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த போது, சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு பெயர் மாற்றம் மூலம் என்ன கிடைக்கப்போகிறது என நேரு மற்றும் சில அமைச்சர்கள் கேள்வி கேட்டனர்.

    அதற்கு அண்ணா, கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்ய சபா என மாற்றியதன் மூலமாகவும், பாராளுமன்றம் என்பதை லோக் சபா என மாற்றிதன் மூலம் என்ன கிடைத்ததோ, அதே அனுகூலம் தான் எங்களுக்கு கிடைக்க போகிறது என பதில் அளித்தார்.

    தமிழ்நாடு என்ற பெயர் நமது வரலாற்றையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் பெயராகும். இதன்மூலம் நமது மாநிலத்திற்கு தனித்தன்மை இருக்கிறது. எனவே, தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ஜெயலலிதா பற்றி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தக்கூடாது. அது பண்பாடற்ற செயல். ஜெயலலிதா உயிரோடு இல்லாதபோது பண்பாடு இன்றி பேசி இருக்கிறார். அவருக்கு அடையாளம் கொடுத்த இயக்கம் அ.தி.மு.க. தான். அவரது செயல் கண்டனத்துக்குரியது' என்றார்.

    Next Story
    ×